சென்னை:தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெற்றோர் பலர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை, ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment