அரசாணையின் வாயிலாக “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் சார்ந்து தீர்வு காணும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறப்பபடும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும் அதில் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திடவும் பள்ளிக் கல்வி இயக்கக அளவில் கீழ்க்காணும் அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக ( Nodal Offcer ) நியமிக்கப்படுகிறார்.
0 Comments
Post a Comment