சென்னை:தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில், பள்ளிகள்நடக்காததால், மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதா, வேண்டாமா என, பள்ளி கல்வி துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.
ஆலோசனை
கடந்த கல்வி ஆண்டில், பள்ளிகளை பொறுத்தவரை, ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள், ஒரு மாதமும்; பிளஸ் 2 மாணவர்கள் நான்கு மாதங்களும், பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்றனர்.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆண்டு முழுதும் பள்ளிகள்இயங்கவில்லை. கல்வி 'டிவி'யில், பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில்பாட நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின.தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலும், ஆன்லைனில் முழுமையாக பாடங்களை நடத்தின.
இந்நிலையில், இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்குவதா, வேண்டாமா என, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.முன்னுரிமைகொரோனாவால், அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், நல்லாசிரியர் விருதுக்கு ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை, வெள்ளிப்பதக்கம் உள்ளிட்டவற்றுக்கான நிதி செலவை குறைத்து, சான்றிதழ் மட்டும் வழங்கலாமா என்றும், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
0 Comments
Post a Comment