கல்வி அமைச்சர் மாண்புமிகு. அன்பில் மகேஷ் பேட்டி!!

பிளஸ் 2 மாணவர்களுக்குமதிப்பெண் வழங்குவதுகுறித்து, தலைமைஆசிரியர்கள், உயர்கல்வி துறைபேராசிரியர்களின்பரிந்துரைகளை பெறமதிப்பெண் கமிட்டி முடிவுசெய்துள்ளது.

 

கொரோனா பரவல்பிரச்னையால், மாணவர்களின்உடல் நலன் கருதி, சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 பொதுத்தேர்வை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசும்பல்வேறு தரப்பினரின்கருத்துக்களை கேட்டு,

 பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்துசெய்துள்ளது. இந்நிலையில், தமிழக பாடதிட்டமாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட, பள்ளி கல்வி முதன்மை செயலர்உஷா தலைமையில் கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது.

இந்தகுழுவில், சென்னை பல்கலைதுணைவேந்தர் கவுரி, உயர்கல்வி துறை செயலர்கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 இக்குழுவினர் நேற்று முதல்பணிகளை துவக்கி உள்ளனர். முதல் கட்டமாக, பள்ளி கல்வித்துறை தலைமை ஆசிரியர்கள்,உயர் கல்வி துறைபேராசிரியர்கள், பள்ளிகல்வித்துறை இணைஇயக்குனர்கள், அண்ணா

பல்கலை பேராசிரியர்கள், சட்டபல்கலை மற்றும் மருத்துவபல்கலை பேராசிரியர்களும்கமிட்டியில் இடம் பெறும்வகையில் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது.

 இதையடுத்து, கமிட்டியில் இடம்பெற்றவர்களிடம் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும்முறையை முடிவு செய்ய,தனித்தனியாக பரிந்துரைகளைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவற்றையும், சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநில மதிப்பெண்வழங்கும் முறைகளையும் ஆய்வுசெய்து, மதிப்பெண்நிர்ணயிக்கும் முறைகள் இறுதிசெய்யப்பட உள்ளதாக பள்ளிகல்வி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.