இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு மற்றும் உயர் நீதிமன்றம் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு வருகைப் பதிவு வைத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் சிறைச்சாலைகளில் தேர்வு எழுத தயார் நிலையில் இருந்த கைதிகளின் நிலை என்ன என்று தெரியாமல் சிறைத்துறை அதிகாரிகளும், அந்தந்த சிறை ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகை பதிவும் இல்லை. எனவே இவர்களின் நன்னடத்தை கருத்தில் கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா அல்லது இவர்களுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுமா என சிறை கைதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு143 சிறை கைதிகளின் நிலை என்ன?: தேர்வுக்கு தயாரான நிலையில் குழப்பத்தில் தவிக்கும் அவலம்
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு மற்றும் உயர் நீதிமன்றம் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு வருகைப் பதிவு வைத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் சிறைச்சாலைகளில் தேர்வு எழுத தயார் நிலையில் இருந்த கைதிகளின் நிலை என்ன என்று தெரியாமல் சிறைத்துறை அதிகாரிகளும், அந்தந்த சிறை ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகை பதிவும் இல்லை. எனவே இவர்களின் நன்னடத்தை கருத்தில் கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா அல்லது இவர்களுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுமா என சிறை கைதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
0 Comments
Post a Comment